அரச துறை புத்துருவாக்கம் மக்களின் முறைப்பாடுகளைக் கவனிக்கும் அரச நிறுவனம் விரைவில்

மக்களின் முறைப்பாடுகளைக் கவனிக்கும் அரச நிறுவனம் விரைவில்

மின்னஞ்சல் அச்சிடுக

மக்களின் முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கக் கூடிய ஒரு அரச நிறுவனம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அண்மையில் நிறுவப்படும்.
இதற்காக விரிவாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகச் சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறுகிறார்.
அரசாங்க தகவல் மையம் அல்லது 1919 செயற் திட்டத்துக்குச் சமாந்தரமாக இம் மக்கள் முறைப்பாடு முகாமைத்துவச் செயற் திட்டம் அமுல்படுத்தப்படும்.
இந் நிறுவனம் சனாதிபதியின் நேர் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்படுவதுடன் அதன் சகல செயற்பாடுகளுக்காகவும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் பாவிக்கப்படவிருக்கிறதென  லலித் வீரதுங்க எடுத்துரைக்கிறார்.
‘இ-பிரதேச’ செயலகம் செய்திட்டத்தைக் கொழும்பு பிரதேசச் செயலகத்தில் சமீபத்தில் அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றிய போதே சனாதிபதியின் செயலாளர் இவ்வாறு கூறினார்.
இவ்; உரையின் போது மேலும் கருத்துத் தெருவித்த சனாதிபதி செயலாளர் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவைசெய்வது சகல அரசாங்க பணியாளர்களதும் கடமையென்று பகர்ந்தார். “கணனியினால் பல சேவைகளைப் புரியலாம். ஆனால் அதனால் மக்களின் இதயத்தைக் கவர்ந்துகொள்ள முடியாது. அரசாங்க பணியாளரினால் மட்டுமே இதனை நிறைவேற்றலாம்”, வீரதுங்க கூறினார்.
“மக்களின் இதயக்கிடக்கையை அறிந்த சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அவாவானது அரசாங்க நிறுவனங்களுக்குத் தங்கள் கண்களில் கண்ணீருடன் வரும் மக்களின் முகங்களைப் புன்சிரிப்புடன் மலரச்செய்வதாகும்” , என்று எடுத்துரைத்த சனாதிபதிச் செயலாளர் இம் முகமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முடியுமென்றும் அதற்கான சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
சனாதிபதி தங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரென்ற காரணத்தினால் மக்கள் தம் பிரச்சினைகளை நேரே சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கவேண்டுமென மக்கள் கருதுகிறார்களெனவும் இது நிறைவேற்று சனாதிபதித்துவத்தின் ஒரு மெச்;சத் தக்க சிறப்பியல்பு எனத் தாம் நம்புவதாகவும் சனாதிபதியின் செயலாளர் கூறினார்.
இவ்வைபவத்தில் பங்குபற்றிய இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர இப்படியான செய்திட்டங்கள் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனவுருவொன்றாகிய ‘இ-ஸ்ரீலங்கா’ செயற் திட்டம் பொருளுள்ளதாக வலுப்படுத்துகின்றனவென்றும் இச் செய்திட்டம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் சேவையின் ஒரு முக்கிய நிகழ்வு என்றும் எடுத்துரைத்தார்.

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

Poll

ඉ-රාජ්‍ය අවකාශයේ දේශීය භාෂා භාවිතය ගැන ඔබගේ හැගීම කුමක්ද? වැඩි විස්තර සදහා මෙම බ්ලොග් සටහන බලන්න http://www.engage.icta.lk/?p=145
 

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices