
இ- அரச கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை யதார்த்தமாக்குவதற்கான கூடுதலான பொறுப்பு அரச நிறுவனங்களின் தலைவர்களிடம்
காணப்படுவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் தலைவர் பீ. டப்ளியூ..அப்பாசிங்ஹ தெரிவித்துள்ளார்.
'இ- அரச கொள்கை தொடர்பாக, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, தேசிய மாநாட்டின் முதலாவது மாநாட்டில்
உரையாற்றுகையில், அவர் இதனைக் கூறினார்.
இ- அரச கொள்கை பிரதானமாக 14 விடயங்களையும், 200 துணை விடயங்களையும் உள்ளடக்கியது என்றும் பெரும்பாலான அரச நிறுவனங்கள் இக் கொள்கையில் அடங்கியுள்ள விடயங்களை
சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதாகக அவர் கூறினார்.
சிரமமான மற்றும் நெருக்கடியான பல விடயங்களை இலகுவான விதத்தில் வெற்றிகொள்ள இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தால் முடிந்துள்ளதாகவும், இலங்கையை
அறிவின் கேந்திர நிலையமாக மாற்றும் பயணத்தில் இ- அரசாங்க கொள்கை இதற்கு உதவியாக அமையும் என்று பேராசிரியர் அப்பாசிங்ஹ தெரிவித்தார்.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர, அரச துறை மீள்நிர்மாண வேலைத்திட்டத்தின் தலைவர் வசந்த தேசப்பிரிய, நிகழ்ச்சிப் பணிப்பாளர் மற்றும்
சட்ட ஆலோசாகர் ஜயந்த பெர்ணாண்டோ ஆகியோரும் இதில் பங்கேற்றார்கள்



இ- அரச கொள்கை தொடர்பாக அரசநிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது மாநாடு.

























