
வைத்தியசாலை ஆரோக்கிய தகவல் முகாமைத்துவ முறைமை போன்ற மென்பொருட்கள் இந் நாடு மஹிந்த சிந்தனை தொலை நோக்கின் குறிக்கோள்களை அடைவதில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய கூறுகிறார்.
கேகாலையில் கரவணல்ல தள வைத்தியசாலையில் வைத்தியசாலை ஆரோக்கிய தகவல் முகாமைத்துவ முறைமை மென்பொருள் (எச்எச்ஐஎம்எஸ்)
(HHIMS); -Hospital Health Information Management Systems )
அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவுக்கு சமீபத்தில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இதற்கான வைபவத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய அமைச்சர், இம் மென்பொருள் மக்களுக்கு சேவை வழங்கலை மிகச் சுமுகப்படுத்துகிறதெனவும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை சுமுகமாக்குவது “மஹிந்த சிந்தனை தொலை நோக்கு'' என்னும் அரசாங்க விஞ்ஞாபனத்தின் பிரதான குறிக்கோளென்றார்.
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் கேதாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ஒருங்கிணைந்து உற்பத்தி செய்துள்ள இம் (எச்எச்ஐஎம்எஸ்) மென்பொருளின் காரணமாக நோயாளிகளின் பராமரிப்பு ஒரு நல்மாற்றத்தைப் பெறும். இதன் காரணமாக நோயாளிகள் வைத்தியசாலையை நாடும் ஒவ்வொரு முறையும் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. நோயாளிகளின் வைத்திய விபரங்களைப் பாதுகாக்கவும் தேவையான விபரங்களைத் தேவையானபடி பார்க்கவும் வசதியை இம் மென்பொருள் கொணரும். கேகாலை மாவட்டத்தில் ; கரவணல்ல, மாவனல்ல, உந்தேகொடை, கிதுல, தெரணியகல ஆகிய ஐந்து வைத்தியசாலைகளில ஆறு மாதங்கள் பரீட்சார்த்த ரீதியில் செய்துபார்க்கப்பட்ட இம் மென்பொருள் தற்போது இலங்கையின் சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் அமுல்படுத்தத் தயாராகவுள்ளது.



















