
‘இ-திரிய’ அல்லது ‘இ-தைரியம்’ என்னும் தகவல் தொழில்நுட்ப பயனறிவு செயற் திட்டத்தின் அங்குரார்ப்பணம் கடந்த 26ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கேகாலையிலுள்ள கொட்டியாகும்புற வித்தியாசாகர பிரிவென புத்த விகாரையில் இடம் பெற்றது.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெறும்.
சமுர்த்தி பெறுபவர்களினதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்களினதும் அடிப்படை கணினி பயனறிவை அபிவிருத்தி செய்வது இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
இவ் அங்குரார்ப்பண விழாவில் பிரதானமாக கேகாலை மாவட்டத்தின் சமுர்த்தி பெறுவோரும் மற்றும் பாடசாலை மாணவர்களும் கொண்டார்கள்.
ஓரு மாதத்துக்குள் நாட்டின் (குறைந்த வருமானம் பெறும்) 50,000 பேருக்கு இப் பயிற்சி வழங்கப்படுவது எதர்பார்க்கப்படுகிறதென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பீ. டபள்யூ. ஆபாசிங்ஹ கூறுகிறார்.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையினதும் கல்வி அமைச்சினதும் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்த இச் செயற்திட்டம் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் அமுல்படுத்தப்படுகிறது.



‘இ-திரிய’ தகவல் தொழில்நுட்ப பயனறிவு செயற் திட்டம் கேகாலையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்.

























