
அபிவிருத்தியின் நலன்களை உண்மையான விதத்தில் அனுபவிக்க தகவல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் இலங்கைக்கு வினைத்திறனானஅபிவிருத்தியை அடைந்து கொள்ள தகவல்தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மக்கள் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இ- திரிய தேசிய தகவல் தொழில்நுட்ப அறிவுத்திட்டத்தை கேகாலை கொடியாகுபுர விதயாசாகர, பிரிவெனா விஹாரையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து அவர் உரை நிகழ்தினார். சமூர்த்தி பயனாளிகள் மற்றும் பாடசலை மாணவர்கள் ஐம்பதாயிரம் பேருக்கு ஒரு மாதத்திற்குள் அடிப்படை கணணி அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும்
தகவலர் தொழில்நுட்பம் நாட்டின் சகல துறைகளினதும் அபிவிருத்திக்கு முக்கியம் வாய்ந்தாகும் என்று திரு. நாமல் ராஜபக்க்ஷ குறிப்பிட்டார். இதனால் கூடுதலானோர்
தகவல் தொழில்நுட்பம் மீது கூடுதலானோர் ஆர்வம் காட்டுகிறார்கள். நாட்டு மக்களின் எண்ணிக்கையை விட கூடுதலான கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக
கூறிய அவர்,கணணிப் பாவனையையும் இந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வது இ-திரிய திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்று கூறினார்.
எவ்வாறாயினும் கணணி,இணையம்,கையடக்கத்தொலைபேசி என்பவற்றை முறையான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுத்தினார்.
எதிர்கால சந்ததியினர் சிறந்த பழக்கங்களை மததித்து நடப்பதன் மூலம் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி அர்த்தமுள்ளதாக மாறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான பின்ணணி பாடசாலைகளில் இருந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கணணி,இணையம்,கையடக்கத்தொலைபேசி,
இதனால் இலங்கை தகவல் தெர்டர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இந்தப் பொறுப்புக்கு உரமூட்டி அடிப்படை தகவல் தொழில்நுட்ப அறிவு தொடர்பானன வேலைத்திட்டங்களை
கடந்த காலங்களில் ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
' நாங்கள் ஆரம்பிக்கும் இபபுதிய வேலைத்திட்டதின் மூலம் இதுவரை உள்வாங்கப்படாத சமூகக் குழுவிற்கு தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்க நடடிவடிக்கை எடுத்துள்ளோம்.
குறிப்பாக 20ஆயிரம் சமூர்த்தி பயனாளிகளுக்கு முதற்கட்டமாக பயிற்சியளிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது.சமூர்த்தி பயனாளிகள் பெறும் அடிப்படை இலகு கணணி அறிவு அவர்களின்
வாழ்கை மட்டத்தை சிறப்பாக மாற்றியமைக்க உதவும் என நான் எண்ணுகிறேன்.
கணணிக்கு சமூர்த்திப் பயனாளிகளின் பசியை போக்க முடியாவிட்டாலும்,குறைந்தபட்ச்
இதனால் நாம் இந்த திட்டத்திற்கு இ- திரிய என்ற பெயரை பயன்படுத்துகிறோம். விஷேடநலன்கள் கிடைக்காத சமூகக்குழுவிற்கு தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் நம்பிக்கை ஏற்படுத்துவது இதன் கருத்தாகும்.
இவர்களுக்கு உலகில் முன்நோக்கிச்செல்ல கணணி அறிவின் மூலம், தைரியம் அளிக்கப்படுகிறது.
டப்ளியு டப்ளியு டப்ளியு டொட் இ-திhய டொட் எல் கே என்ற இணைய தளத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார்
பொது நலவாய இளம் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை சார்ப்பாக வெண்கலப் பதக்கம் வென்ற கேகாலை புனித ஜோசப் மகளிர் மகாவித்தியால மாணவி ஆர். ஏம் சிவந்திக்கு லப்டொப் மடிக்கணணியொன்று பரிசாக வழங்கப்பட்டது.



அபிவிருத்தியின் நலன்களை உண்மையான விதத்தில் அனுபவிக்க தகவல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமானது

























