
2012 தெற்காசிய கைத்தொலைபேசி மாநாடு தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நலன்களை வழங்க முக்கியமாக அமைந்தது என்று இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பீ.டபிள்யு. ஆபாசிங்க தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பேராசிரியர் ஆப்பாசிங்க கொழும்பில் இடம்பெற்ற மூன்றாவது தெற்காசிய கைத்தொலைபேசி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
உலக கைத்தொலைபேசி சுகாதாரத்தை மேம்படுத்வது தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளதாக பேராசிரியர் வரவேற்பு உரையின் போது தெரிவித்தார்.
உலகில் முதல்தடவையாக இலங்கை விஞ்ஞானிகள் கைத்தொலைபேசிகளில் வாழும் சிரங்குகளை உருவாக்கும் பூச்சி வகைகளை கண்டுபிடித்துள்ளார்கள் என்று இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இந்த பூச்சி வகைகள் தொடர்பான ஆய்வுகள் இடம் பெறுவதாகவும், அவை பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் தெரியவரும் என்றும் நிறுவகம் கூறுகிறது.



2012 தெற்காசிய கைத்தொலைபேசி மாநாடு: ஒரு முக்கியமான நிகழ்வு : பேராசிரியர் பீ.டபிள்யு. ஆபாசிங்க


























