.jpg)

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் அரசாங்க நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் சேவைகளை வினைத்;திறனாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
2012 சார்க் பிராந்திய பியுச்சர் கவ் மாநாட்டில் அவர் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். கெர்ழும்பு சினமன் கிராண்ட் விடுதியில் இரண்டு நாட்கள் மாநாடு இடம்பெற்றது.
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் அரச நிறுவனங்களின் மனித மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய பாரிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும்,அதன் நலன்கள் மக்களை அனுபவித்து வருகிறார்கள் என்றும் திரு.வீர்துங்க அங்கு தெரிவித்தார்.
ஆயிரம் நெசனல செயற்திட்டம், 1919 எனப்படும் அரசாங்கத் தகவல் மையம், பிறப்பு,விவாக,இறப்பு சான்றிதழ்களை கணினி முறையில் வெளியிடுதல்,பீஎம்டி செயற்திட்டம், இணைய “பாட்டஷாலா” செயற்திட்டம் போன்றவற்றினால் மக்களுக்கு இன்று தகவல் தொழில்நுட்பத்துறையின் வசதிகள் கிடைத்துவருவதாக அவர் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்தின் சேவைகளை வழங்குவது தொடர்பில் இலங்கை தற்போது சர்வதேச புகழுக்கு பாத்திரமாகிவருவதாக திரு.வீரதுங்க குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்ப வெளியகப்படுத்தல் சேவையின் மூலம் 2016ம் ஆண்டளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலங்கை எதிர்பார்த்துள்ளதாவும் மேலும் அங்கு தெரிவித்தார்.
தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பீ.டப்ளியு அப்பாசிங்க, நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர உட்பட உள்நாட்டு,வெளிநாட்டு தொழில்சார் நிபுணர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.



தகவல் தொடர்பாடல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவதன் மூலம் அரச சேவைகளை வினைத்திறனாக மேற்கொள்ள முடிந்தது

























