இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அனுசரணையுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரிய வௌ பிரதேசச் செயலகத்துக்குள் ஆரம்பித்து நடாத்தப்பட்டுவரும் சூரிய வௌ நெனசள அறிவகத்தின் உரிமையாளரும் முகாமையாளருமாகிய திருமதி தீபிகா பிரியதர்ஷணிக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில 2009 –ம் ஆண்டின் சேவைத்துறையில்; அதி சிறந்த தொழில்துணிவுள்ளவர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட வாணிகச் சபையினால் இவ்விருதுக்கான சான்றும் சின்னமும் கடந்த மாதம் 15-ந் திகதி அதற்கான விருது விழாவின்போது வழங்கப்பட்டன. இதற்கான தெரிவு மிகக் கடுமையான தேர்வு வழிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட துறைகள் உட்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட ஒரு தேர்வுக்குழுவின் மூலம் நடத்தப்பட்டதென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் செயற்திட்ட முகாமையாளர் எஸ் கவஷ்கார் கூறினார்.
பெண்கள் வியாபரத்துறையில் குறைவாக ஈடுபாடுகொள்ளும் அதே வேளையில் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் இவ்வாறான ஈடுபாடு அதிமாகத் தேவைப்படும் இச் சூழ்நிலையில் திருமதி தீபிகா மற்ற சகல பெண்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரிகை என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் நிறைவேறறதிகாரி ரெஷான் தேவபுர தெருவித்தார்.
விருதுக்கான சான்றையும் சின்னத்தையும் ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை உபவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்காவிடமிருந்தும்; ஹற்றன் நெஷனல் வங்கியின் ஹம்பாந்தோட்டைக் கிழையின் முகாமையாளர் எஸ். கே. ஜயசிங்ஹவிடமிருந்தும் திருமதி தீபிகா பெற்றுக்கொண்டார்.



அதி சிறந்த தொழில்துணிவுள்ளவர்

























