அதிக ஆக்கபூர்வமானவிதத்திலும் கவர்ச்சிகரமான விதத்திலும் அரசாங்கதுறையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப செய்திட்டங்களை மக்களுக்கு வழங்கியதற்காக இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இன்பொடெல் 2010 விருதுவைப் பெற்றது.
இவ்விருது இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துக்கு சமீபத்தில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டுக் கூடத்தின் சிரிமாவோ பண்டாரநாயக்கா கூட்ட மையத்தில நடைபெற்ற தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சியாகிய இன்பொடெல் 2010-ல்; வழங்கப்பட்டது.
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கண்காட்சிக் கூடத்துக்கு வந்து வேண்டுகோள் விடுத்தவர்களுக்கு அவர்கள் தேவைக்கேற்ப பிறப்பு மற்றும் விவாகச் சான்றுகள் அக்கண்காட்சிக்கூடத்திலேயே ஒரு கணப்பொழுதில் வழங்கப்பட்டமை இவ்விருதுவை வழங்த் தீர்மானிக்கும் போது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதென இன்பொடெல் அமைப்பாளர்கள் கூறினர்.
இக்கண்காட்சி நடந்த மிகக் குறுகிய காலப்பொழுதாகிய ஒக்டோபர ;மாதம் முதலாம் திகதியிலிருந்து நாலாம் திதகி வரை ஏறத்தாள 1000 பிறப்புச் சான்றுகள் கொழும்பு மாவட்டச் செயலாளரின் அறிவுரையின் கீழ் வழங்கப்பட்டன.
அத்துடன் இக்கண்காட்சியின் இறுதி நாளாகிய ஒக்டோபர் நான்காந் திகதி இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் நடாத்திய தகவல் தொழில்நுட்ப வாணிக செயற்பாடுகளை வெளியகப்படுத்தல் (ஐவு-டீPழு) கைத்தொழிலிலுள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய வழிகாட்டல் செயலமர்வு இன்பொடெல் 2010க்கு பெறுமதியை அதிகரித்ததென இன்பொடெல் ஒழுங்குபடுத்தல் குழுவின் தலைவர் ஏ. ஜயசீலன் கூறினார்.



இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துக்கு இன்பொடெல் 2010 விருது;


























