இலங்கைக்கு அண்ணியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான வழியாக தகவல் தொழில்நுட்பத்துறையை மாற்றுவது தமது நோக்கமாகும் என்று தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், ரன்ஜித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான பின்னணியை ஏற்படுத்த இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்ரீலங்கா டெலிகொம் உட்பட துறைசார் புத்திஜீவிகள் மற்றும் பிரபலங்களை உள்ளடக்கிய குழுவொன்று விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய குறிப்பிட்டர் .
தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் பணிகளை ஆரம்பித்துஅ வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இலக்கம் 79ஃ15வது ஒழுங்கை கொள்ளுப்பிட்டி என்ற முகவரியில் அமைச்சு இயங்குகிறது.
ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்ச்சி வெற்றியளித்துள்ளது. நாட்டின் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இதற்காக எனது அமைச்சுக்கு பாரிய பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டளவில் தகவல் தொழில்நுட்ப அறிவை 75 சதவீதத்திற் எடுத்துச்செல்வது அவசியமாகும். இதே போன்று பேதங்கள் இன்றி தகவல் தொழில்நுட்பத்துறையின் நலன்களைப் போன்று அதன் அறிவையும் சகலருக்கும் வழங்கக்கூடிய பின்ணணியை ஏற்படுத்துவது எம்மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பாகும் என்று அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய இங்கு மேலும் வலியுறுத்திக் கூறினார்.
சர்வமத நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 10.16க்கு உதயமான சுபவேளையில் அமைச்சர் தனது அமைச்சில் பணிகளை பணிகளை ஆரம்பித்தார்.
தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நிமல் அத்துக்கோரல, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்நிலையத்தின் தலைவர் பேராசியார் பீ. டப்ளியு அப்பாசிங்ஹ, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் நிமல் வெல்கம ஆகியோர் உட்பட கூடுதலானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.



இலங்கைக்கு அண்ணியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான வழியாக தகவல் தொழில்நுட்பத்துறையை மாற்றுவது ..


























